Tuesday, April 5, 2011

from my heart

இந்திரனக்கு கோபம் போலும்
இடியும் மின்னலும் என்னை மிரட்ட
வருடி கொடுத்தது ஒரு கரம்
இதமாய் அனைத்தது ஒரு கரம்

கேட்டது ஒரு குரல்
பட்டு திரைசீலையை நீக்கி பார்
இந்த இடியும் மின்னலும் உனக்கில்லை

எட்டி பார்த்தேன்
பக்கத்துக்கு வயலில்
குடிசை வாசலில்
கோமணத்துடன் மழையில் ஆடி களித்தான்
ஏழை விவசாயி -

இடியும் மின்னலும் மழையும் அவன் பயத்தை போக்கியதால்

No comments:

Post a Comment